எ.செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் வசித்து வரும் நான் எனது கணவரின் வருமானத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிரமமான முறையில் குடும்பத்தை நடத்தி வந்தேன். தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு வகையான பயிற்சிகளை இலவசமாக வழங்குவதை அறிந்து கொண்ட நான் தையல் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன்.

எனக்கு 15.07.2022 முதல் 29.08.2022 வரை பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்முறை பயிற்சியாளர்கள் சிறப்பான முறையில் பல்வேறு வகையான தையல், கட்டிங் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் என தையல் பயிற்சி அளித்தனர் பயிற்சி முடித்த பின்னர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் எங்களுக்கு 14:11,2022 தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சி நிறுவனம் எங்களுக்கு Seing Machine Operator Certificate & Mark sheet வழங்கியது.

நான் சொந்தமாக தையல் தொழிலைத் தொடங்க நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு பயிற்சி அளித்தது மட்டும் இன்றி எனது வீட்டிற்கு அருகில் உள்ள தையல் கடையில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ரூ. 7700/- ஊதியத்தில் வேலை வாங்கி கொடுத்தனர். மேலும் என் வீட்டிலேயே ரவிக்கை மற்றும் சுடிதார் போன்றவற்றை தைத்து கொடுத்து அதன் மூலமும் வருவாய் பெற்று வந்தேன்.

நான் எங்கள் பகுதியில் செயல்படும் மகளிர் குழுவில் உறுப்பினராக இருப்பதால், சொந்தமாக தையல் தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தில் மகளிர் குழுவின் மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு ரூ.50,000 கடன் கிடைத்தது. அந்தத் தொகையைக் கொண்டு, சொந்த தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி அதன்மூலம். வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறேன். எனக்கு இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இப்போது, எனது சொந்த தையல் தொழிலை சிறப்பான முறையில் நடத்தி வருவதால் எனக்கு கணிசமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது நான் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை மாற்றிய தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

என் பெயர் கோமதி, நான் நாமக்கல் மாவட்டம். கபிலர்மலை வட்டாரம். சோழசிராமணி ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனது குழந்தை பிறந்த போதே மாற்றுத் திறனாளியாக பிறந்ததால், எனது கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். எனது மாற்றுத் திறனாளி குழந்தையுடன் பொருளாதாரத்தில் நான் மிகவும் சிரமப்பட்டேன்.

இத்தகைய சூழ்நிலையில் மகளிர் குழு குறித்து அறிந்து கொண்ட எங்களது பகுதியில் உள்ள 12 பெண்கள் இணைந்து 2000ஆம் ஆண்டில் துர்க்கை மகளிர் சுய உதவி குழுவினை அமைத்து, மாதம்தோறும் ரூ.50/- வீதம் சேமித்து வந்தோம். இந்த சூழ்நிலையில் எனது குழந்தையும் இறந்து விட்டது. ஆதரவற்ற நிலையில் நான் இருந்தபோது எனது குழுவின் உறுப்பினர்களின் ஊக்கத்தினால் தையல் தொழிலை செய்து வருவாய் பெற்று வந்தேன். தொடர்ந்து குழுவாக இணைத்து தையல் தொழிலை செய்திட முடிவெடுத்து, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் சமுதாய முதலீட்டு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று மூன்று தையல் இயந்திரம் வாங்கி தொழிலை துவங்கினோம்.

மேலும் 6 உறுப்பினர்களுக்கு டாப்செட்கோ கடனாக வங்கியில் 6 இலட்சம் ரூபாய் பெற்று. அத்தொகையிலும் தையல் இயந்திரங்கள் வாங்கி, தையல் தொழில் செய்து, நானும் எனது குழு உறுப்பினர்களும் தினசரி ரூ. 500/- வரை வருமானத்துடன் வாழ்வதாரத்தை உயர்த்தியுள்ளோம்.

ஆதரவற்ற நிலையில் இருந்த என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட உறுதுணையாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எங்களது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

திருப்பூர் மாவட்டம். பெரிய வரப்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குணசேகரன். டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பு கிடைக்காததால், தனது தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையைத் செய்து வந்தார். அவருக்கு இயந்திர தொழில்நுட்பம் குறித்த எவ்வித தொழில் அனுபவமும் இல்லை. என்றாலும் தனது வேலை தேடலை அவர் நிறுத்தவே இல்லை. தனக்கென இயந்திர தொழில் நுட்பத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கான வழியைத் தேடினார், அந்த நேரத்தில் அவர் வசித்து வரும் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பணியாளர்கள் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கும் தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் (DDU (GKY) திட்டம் பற்றி அறிந்து கொண்டார்.

பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின்படி DMW கல்வி மற்றும் அறக்கட்டளையில் DDU-GKY திட்டத்தின் மூலம் CNC ஆபரேட்டர் பயிற்சியை கற்க தேர்வு செய்யப்பட்டார். இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி பெற்ற குணசேகரன். பயிற்சிக்குப் பிறகு ஈரோட்டில் உள்ள DMW CNC சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் பணிபுரிகிறார்.

தற்போது குணசேகரன் நவீன தொழில்நுட்ப இயந்திரமான NHX 6300 இயந்திரத்தை இயக்குகிறார். மேலும் இந்த வகை CNC மெஷின்கள் மூலம் தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையை உருவாக்க அவர் திட்டமிட்டு, அதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். DDU- GKY திட்டத்தின் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சியும், தொழில் வாய்ப்பும் பெற்ற குணசேகர், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய DDU-GKY திட்டத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

 
மேலும்

என் பெயர் கலைச்செல்வி, நான் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழிற்கூடத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானம் எனது குடும்பத்தின் வறுமையை போக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன். இததகைய சூழ்நிலையில் புள்னைநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு உறுப்பினராக இனைந்தேன்.

நான் செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்த பின்னர் குழுவின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ. 20,000/ பெற்று அத்தொகையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்ற பொழுது கற்றுக கொண்ட அனுபலத்தின் அடிப்படையில் நான் சுயமாக தஞ்சாவூர தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கினேன்.

இப்பொம்மைகள் தயாரிக்கத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களான சுண்ணாம்பு தூள் மற்றும் காகிதம் ஆகியவற்றை கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்து தலையாட்டி பொம்மைகளை நான் தயாரித்து வருகிறேன்.

என்னுடைய தொழிலில் எனது கணவகும், குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்ததால் அதிகளவில் பொம்ய்ைகள் தயாரிக்க முடிந்தது. நாளொன்றிறகு ஒரு நபருக்கு 15 பொம்மைகள் விதம் குழு உறுப்பினர்களைக் கொண்டு 60 பொம்மைகள் தயாரித்து வருகின்றேன். எங்கள் குழுவினர் தயாரிக்கும் நடனமாடும் பொம்மை, தலையாட்டிப் பொம்மை, செட்டியார் பொம்மை போன்றவைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

தலையாட்டி பொம்மை ரூ 40/-க்கும். நடனமாடும் பொம்மை ஜோடி ஒன்று ரூ-150/-க்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள மதி விற்பனை அங்காடிகளிலும் (தஞ்சை தாரகைகள்) மற்றும் தஞ்சை இரயில் நிலையததில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (One Station One Product) நிலையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் விற்பனை நல் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ரூ 1000/ முதலீடு செய்து ரூ 900/- வரை இலாபம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் வருமானம் வருகிறது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக தஞ்சை தாரகை விற்பனை அங்காடிகளில் ரூ. 1,00,000/ மதிப்பிலான பொம்மைகளும் மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையத்தில் ரூ. 25,000- மதிப்பிலான பொம்மைகளும் விற்பனை ஆகின்றது.

வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் எனக்கு வருமானம் வருகிறது என்னுடைய வாழ்வதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன.

மேலும்

என் பெயர் வினோதினி மணிவண்ணன். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் கணவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். எனது மகள் MBA படித்துள்ளார். எனது மகன் BE படித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான், என் கணவரின் குறைந்த அளவு வருவாயைக் கொண்டு குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வந்தேன். இந்நிலையில் இருந்து மாறுவதற்கும், வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் என்னுள் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் இசையருவி மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்தேன். அக்குழுவில் இருந்து வங்கி நேரடிக் கடன் பெற்று அதனுடன் நண்பர்களிடம் சிறிது கடன் பெற்று, அதில் தையல் இயந்திரம் வாங்கி கிராமத்தில் உள்ள பெண்களுக்குத் துணி தைத்து தந்து வருமானம் ஈட்டி வந்தேன். ஆனாலும் போதுமான வருவாய் கிடைக்கவில்லை. ஆகையால் அழகு நிலையம் வைத்து வருமானம் ஈட்டலாம் என்று தோன்றியது.

அச்சமயத்தில் பெரம்பலூர் IOB வங்கியின் (REST) கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் அழகு கலை சம்பந்தமான பயிற்சி பெற்றேன். தற்பொழுது பாடாலூர் ஊராட்சியிலேயே சிறிய அளவில் பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையல் கடை நடத்தி வருகிறேன். எனவே, தொழிலை மேம்படுத்த ஆலத்தூர் வட்டார வணிக வள மையத்தின் மூலம் குறைந்த வட்டியில் ரூ.50,000/ சமுதாய தொழில் நிதி பெற்று. அதனைக் கொண்டு. அழகு நிலையத்திற்குத் தேவையானப் பொருட்கள் மற்றும் தையல் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி தற்போது எனது தொழிலை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். தற்பொழுது நான் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை வருமானம் ஈட்டி, குடும்ப செலவுகள் மற்றும் படிப்புச் செலவிற்கு போக மீதி மாதம் ரூ.5,000/- வரை சேமித்து வருகிறேன். எனது வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது தொ வித்துக் கொள்கிறேன். நன்றிகளைத்

மேலும்

திருவாரூர் மாவட்டம், கீரங்குடி கிராமத்தில் வசித்து வரும் என் பெயர் திலீப் (வயது 21). 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள நான். தனியார் கல்லூரியில் பொறியியியல் படித்து முடித்த பிறகு வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். அப்போதுதான் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் செயல்தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் (DDU-GKY) மூலம் Capital Educational and Charitable Trust நிறுவனத்தில் வேலை உத்திரவாதத்துடன் பயிற்சி அளிப்பதை அறிந்தேன். உடனடியாக எனது கல்வி சான்றுகளுடன் அந்த நிறுவனத்தை அணுகினேன். எனது சான்றுகளை சரிபார்த்த பிறகு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சி முடிந்தவுடன் பெருங்குடியில் உள்ள Mi-Tech Bus Doors எனும் நிறுவனத்தில் CNC - Setter Cum Operator பணியில், மாதம் ரூபாய் 22.000 ஊதியத்தில் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டேன்.

எனக்கு கிடைத்த பணி வாய்ப்பினால், என் ஊதியத்தை ஒரு பகுதியை என் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க முடிகிறது. நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். என் நண்பர்கள் பலருக்கு தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் குறித்தும், அவற்றின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் தரும் பயிற்சிகள் குறித்தும் தெரிவித்து உள்ளேன். அதில் ஒரு சிலர் பயிற்சியில் சேர்ந்து உள்ளனர், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தீனதயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தென்னமாதேவி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் முன்னேற்ற சங்க கய உதவிக் குழு (MMS-6) ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் களிமணணில் பல்வேறு பொம்மைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்றல் மகளிர சுய உதவிக் குழுவானது மகளிர் திட்ட சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக கடன் ரூ.2 இலட்சம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிதி ரூ.150 இலட்சம் பெற்று தங்களின் தொழிலை விரிவுபடுத்தி வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்னமாதேவி மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS- 6) வங்கிக் கடன் ரூ.2 இலட்சம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி உதவி பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சுடுமண் மூலமாக பொம்மைகள் செய்து விற்பனை செய்து வந்த இக்குழுக்கள் ர அய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) மூலமாக பயிற்சி பெற்று கலைநயமிக்க பல்வேறு வண்ணங்களில் மண்பாண்ட பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்வதோடு, ஆஸ்த்ரேலியா, களடா மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.

இக்குழுக்கள் தயார் செய்யும் பொம்மைகள் மற்றும் கைவிளைப் பொருட்களுக்கு மகளிர் திட்டத்தின் வாயிலாக உள்ளூரிலும், மாநில அளவில் விற்பனை கண்காட்சியிலும் மற்றும் பிற மாநிலங்களில் நடத்தப்படும் சாராஸ் உள்ளிட்ட கண்காட்சியிலும், விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்குழுக்களின் உறுப்பினர்கள் மாதந்தோறும் கணிசமான வருவாய் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதார வார்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தென்றல் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS-6) ஆகிய சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் குழு கடந்த 2014 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் 6 நபர்கள் இணைந்து கோரை புல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டோம்.

இத்தொழிலை மேற்கொள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து ரூ.1,00,000/- மற்றும் வங்கி கடனாக ரூ.5,00,000/ பெற்று கோரை புற்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கோரை பை, நகை பெட்டகம், புடவைப் பெட்டி, பரிசுப் பெட்டி மற்றும் டீ கப் விரிப்பு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதன் வாயிலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.9,000/- வரை மாத வருமானமாக கிடைக்கிறது. இந்தப் பொருட்களைத் தயாரிப்பதன் வாயிலாக குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து சுற்றுசுழலும் பாதுகாக்கப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு செல்லியம்மன் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

தென்காசி மாவட்டம். புளியங்குடி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 12 பெண்கள் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். போதிய வருவாய் இல்லாத நிலையில் அனைவரின் குடும்பத்திலும் வறுமை நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் SEP-G திட்டத்தின் கீழ் வங்கிக் கடனாகரூ. 6 இலட்சம் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டு தங்களின் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கி தற்போது நெசவுத் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

தங்களுக்கு கடன் வழங்கி, தொழிலை சிறப்பாக மேற்கொள்ள உதவிய தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

Page 1 of 2, showing 9 record(s) out of 17 total