தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளால் தலைநிமிர்ந்த வாழ்வு

என் பெயர் கலைச்செல்வி, நான் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழிற்கூடத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானம் எனது குடும்பத்தின் வறுமையை போக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன். இததகைய சூழ்நிலையில் புள்னைநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு உறுப்பினராக இனைந்தேன்.

நான் செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்த பின்னர் குழுவின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ. 20,000/ பெற்று அத்தொகையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்ற பொழுது கற்றுக கொண்ட அனுபலத்தின் அடிப்படையில் நான் சுயமாக தஞ்சாவூர தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கினேன்.

இப்பொம்மைகள் தயாரிக்கத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களான சுண்ணாம்பு தூள் மற்றும் காகிதம் ஆகியவற்றை கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்து தலையாட்டி பொம்மைகளை நான் தயாரித்து வருகிறேன்.

என்னுடைய தொழிலில் எனது கணவகும், குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்ததால் அதிகளவில் பொம்ய்ைகள் தயாரிக்க முடிந்தது. நாளொன்றிறகு ஒரு நபருக்கு 15 பொம்மைகள் விதம் குழு உறுப்பினர்களைக் கொண்டு 60 பொம்மைகள் தயாரித்து வருகின்றேன். எங்கள் குழுவினர் தயாரிக்கும் நடனமாடும் பொம்மை, தலையாட்டிப் பொம்மை, செட்டியார் பொம்மை போன்றவைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

தலையாட்டி பொம்மை ரூ 40/-க்கும். நடனமாடும் பொம்மை ஜோடி ஒன்று ரூ-150/-க்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள மதி விற்பனை அங்காடிகளிலும் (தஞ்சை தாரகைகள்) மற்றும் தஞ்சை இரயில் நிலையததில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (One Station One Product) நிலையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் விற்பனை நல் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ரூ 1000/ முதலீடு செய்து ரூ 900/- வரை இலாபம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் வருமானம் வருகிறது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக தஞ்சை தாரகை விற்பனை அங்காடிகளில் ரூ. 1,00,000/ மதிப்பிலான பொம்மைகளும் மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையத்தில் ரூ. 25,000- மதிப்பிலான பொம்மைகளும் விற்பனை ஆகின்றது.

வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் எனக்கு வருமானம் வருகிறது என்னுடைய வாழ்வதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன.