தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் 1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி இணைப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றல் மேம்பாட்டை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பின்வரும் நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

About