கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா

resti

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கிட, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes – RSETIs) அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவை ஊக்கப்படுத்திட வங்கி கடன் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 30 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய 6 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் துவங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021-22-ம் நிதியாண்டில், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக மொத்தம் 15,736 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, 13,069 இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.