நிகழ்ச்சி நிரல்

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில்  தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.  

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு,  விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.  இந்த அட்டை மூலம்  www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

          இன்றையதினம் பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் நடைபெற்ற “உங்க கனவ சொல்லுங்க” திட்ட தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பயனாளிகள் நேரடியாக தங்கள் கருத்துக்களையும், கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

          அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் கனவுகளையும் காணொலி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்  பகிர்ந்து கொண்டனர்.

 

          பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்நிகழ்ச்சியில் தங்கள் கனவுகளை தெரிவித்த பெண்மணிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்றதற்கான கனவு அட்டைகளையும், இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைப்பேசி data card ஆகியவற்றையும் வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சசிகாந்த் செந்தில், டாக்டர் கலாநிதி வீராசாமி, திரு. இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். சுதர்சனம், திரு.எஸ். சந்திரன், திரு. டி.ஜெ. கோவிந்தராஜன், திரு. வி.ஜி. ராஜேந்திரன், திரு. ஆ. கிருஷ்ணசாமி,  திரு. துரை சந்திரசேகர், திரு.கே.பி.பி. சங்கர், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு.பிரதாப், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

***************

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின்        மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார்.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். அன்று அவர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சராக இருந்த போது அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தனது கரங்களால் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி சேமிப்பு புத்தகம் மற்றும் கடனுதவிகளை வழங்கினார்.

அதுவரை பெண்கள் வங்கிகளுக்கு சென்று தங்கள் தேவைகளை கேட்க தயங்கிய நிலைமாறி, தற்போது பெரும்பாலான வங்கிகளின் முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வாடிக்கையாளர்களாக மகளிர் சுய உதவிக்குழுவினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்திட்டங்களின் பயனாக இன்று ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் 4.96 இலட்சம் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த ஐந்தாண்டுகளில் 21,08,697 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,74,13,061 உறுப்பினர்களுக்கு 1,38,564.85 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மிகப்பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த விலையிலான உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது. அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழாவில், 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், 90களில் (90s Kids) பிரசித்திப் பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழாவை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2025) திறந்து வைத்து பார்வையிட்டார். அரங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, சைவ, அசைவ, சிறு தானிய உணவுப் பொருட்களை ருசி பார்த்து செய்முறை மற்றும் விற்பனை அனுபவம் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு வணக்கம்.

இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவிற்கிணங்க மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பாக பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (21.12.2025) லிருந்து வருகின்ற 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய மாவட்டங்களில் பிரபலமான உணவு வகைகளை சமைத்து விற்பனை செய்ய 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 70 குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் அரசின் சார்பாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் நம்முடைய துறை 5 நாட்களுக்கு உணவுத் திருவிழாவினை நடத்தியிருந்தது. அதில் எல்லா விதமான சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் தரமாக சமைத்து பரிமாறப்பட்டது. உணவுத் திருவிழாவினை பார்வையிட வந்த பொதுமக்கள் சாப்பிடுவதற்கும், கைகழுவவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடற்கரை உணவுத் திருவிழாவிற்கு வந்த நினைவுகள் நீங்காமல் இருக்க புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள செல்பி பாயிண்ட்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்திருந்தார்கள்.

கடந்த நவம்பர் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 62 இலட்சம்  ரூபாய் அளவிற்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் துவக்கி வைத்திருக்கின்றோம். சுத்தமான முறையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பரிசோதிக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

குறிப்பாக அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் இவற்றை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகள் உணவுத் திருவிழா நடைபெறும் தேதிகளை முடிவு செய்தார்கள். இந்த உணவுத் திருவிழாவிற்கு சென்னையில் உள்ள பொதுமக்கள், உணவு பிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் எல்லோரும் வருகை தந்து, உணவு வகைகளை ருசித்து, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

 இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு. மு.மகேஷ்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (தெற்கு) திரு.அஃதாப் ரசூல், மாமன்ற உறுப்பினர் திருமதி ம.ராதிகா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை  திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.

 

  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2025) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை  திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.

 இந்த வாடிக்கையாளர் அட்டையின் மூலம் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு, 500 மதிப்புப் புள்ளிகள் சேர்ந்தவுடன் 500 ரூபாய்க்கு சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், கடந்த மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவினை சிறப்பாக நடத்தியதற்காக சுய உதவிக் குழுவினர், சிறப்பாக செயலாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

 பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம்,

 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்திலும்,  சிறப்பான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய குழுக்கள் பங்குபெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு,  கண்காட்சி இங்கு நடத்தப்படும்.

 

அந்த கண்காட்சி இங்கே இன்று திறந்து வைக்கப்படுகின்றது. இன்று முதல் ஜனவரி 4ஆம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 18 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும். இதில் 72 சுய உதவிக்குழுக்களைக் கொண்டு 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விற்பனைக்காக 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மூலம் இங்கே காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு வருடமும் இந்த கண்காட்சியில் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு நம்முடைய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.  நம்முடைய அரசு அமைவதற்கு முன்பாக  பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் வருடத்திற்கு  அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி இருந்தது.  அதன் பிறகு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்திற்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று, அவர்கள் எவ்வளவு விற்பனை செய்கின்றார்களோ, அதை உயர்த்துவதற்காக பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கின்றோம்.

 

 சட்டமன்றத்தில் பேசும்போது, நான் குறிப்பிட்டு பேசினேன். இந்த வருடம் எங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கக்கூடிய இலக்கு 600 கோடி என்று சொன்னார்கள். இதற்கு முந்தைய வருடம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம். இந்த ஆண்டு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 690 கோடி ரூபாய்க்கு விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது.  எனவே இலக்கைவிட அதிகமாக நம்முடைய சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள். அதற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஒரு 6 மாதங்களுக்கு முன்பு முதன்முறையாக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு அவர்களுடைய புகைப்படம், பெயர், அவர்கள் குழுவின் பெயர் சேர்த்து அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள். அவர்கள் தயார் செய்கின்ற பொருட்களை பக்கத்து ஊரிலோ அல்லது பக்கத்து மாவட்டத்திற்கோ எடுத்து சென்று விற்பனை செய்வதற்கு போக்குவரத்து செலவுகள், கட்டணமின்றி, 25 கிலோ வரை இலவசமாக பேருந்தில் எடுத்துச் செல்லலாம்.

அதே மாதிரி கோ -ஆப்டெக்ஸில் சலுகைகள், ஆவினில் அவர்களுக்கு சலுகைகள் இப்படி அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுத்திருக்கிறோம். 50 இலட்சம் சுய உதவிக்குழு சகோதரிகளில், கிட்டத்தட்ட 22 இலட்சம் பேருக்கு  அடையாள அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே வந்திருக்கின்ற பல சகோதரிகள் அந்த அட்டைகளை என்னிடம் காண்பித்து, அதனால் என்னென்ன பலன் அடைகின்றார்கள் என்று பெருமையாக சொன்னார்கள்.

 

அதுமட்டுமல்ல, விற்பனையை அதிகரிப்பதற்கு, மதி அனுபவ அங்காடிகள் பல மாவட்டங்களில் உள்ளது. அதில் வருடம்தோறும் விற்பனையை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு வெகுமதி புள்ளி அட்டைகள்  (Reward point card) கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் வந்து, இது போன்ற விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில், விழா நாட்களில் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, மொத்தமாக வாங்கி பரிசளிப்பார்கள், அப்படி கொடுக்கும்போது இங்கே வந்து பார்த்து, இங்கு இருக்கக்கூடிய பொருட்களை அவர்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு வாங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 

  இந்நிகழ்ச்சியில்,  சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு. நே.சிற்றரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்  அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்
ரூ.766.53 கோடி செலவிலான 577 முடிவுற்ற திட்டப் பணிகளை
திறந்து வைத்து, 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
43,993
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. . ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் நடைபெற்ற அரசு விழாவில், 223 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலான 577 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 43,993 பயனாளிகளுக்கு 341 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில், 15-வது நிதிக்குழு மான்யம்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு, நமக்கு நாமே திட்டம்,  தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),  பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை மையங்கள், புதிய மற்றும் சீரமைக்கப்பட்ட துணை சுகாதார வளாகங்கள், சீரமைக்கப்பட்ட நூலகங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், புதிய இடுகாடுகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் நடைபாதைகள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கதிரடிக்கும் தளங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட குளங்கள்,  சமுதாயக் கூடங்கள், தார்சாலைகள்,  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் மோட்டார் வசதிகள், நாடக மேடைகள்,  பேருந்து நிழற்குடைகள், பொது சேவை மையக் கட்டடங்கள், புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் சமையலறைக் கொட்டகைகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், கலையரங்கங்கள், பொருள் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்கள் மற்றும் கழிவறைகள், மின் மயானம், பேவர் பிளாக் சாலைப் பணிகள், புதிய நெற்களங்கள், பொது விநியோகக் கடைகள், உணவு அருந்தும் கூடங்கள், என மொத்தம் 132 கோடியே 46 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலான 555 முடிவுற்றப் பணிகள்;

 

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,  கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர், தட்டாவூரணி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் 4 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடைகள், புதுக்கோட்டை மாநகராட்சியில் திருவப்பூர் மற்றும் இராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், சந்தைப்பேட்டை, சாந்தநாதபுரம், கோவில்பட்டி மற்றும் போஸ் நகர் ஆகிய இடங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் காந்திநகர் தொடக்கப் பள்ளிகளில் 3 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்கள்;

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருமயத்தில் 10 கோடி ரூபாய் செலவில் விரிவான அவசர சிகிச்சை மையக் கட்டடம், வளையபட்டி அரசு மருத்துமனையில் 63 இலட்சம் ரூபாய் செலவில் பிணவறை பிரிவுக் கட்டடம், நார்த்தாமலையில் 60 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்;

 

பள்ளிக் கல்வித் துறை சார்பில், புனல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 47 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கல்லாக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் 65 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள்;

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், அன்னவாசலில் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்களுக்கான நிழற்கூடம்;

 

எரிசக்தித் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 32 கோடியே 92 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் பளு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தினை சீர்செய்திட 212 எண்ணிக்கையிலான மின்மாற்றிகள், பாக்குடி மற்றும் நகரப்பட்டி, புதுக்கோட்டை மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களின் 7 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் திறன் கூட்டப்பட்ட திறன் மின்மாற்றிகள்;

 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், ஆலங்குடி திட்டப்பகுதியில் 28 கோடியே 64 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்;

 

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய் செலவில் கோட்ட அளவிலான விழுதுகள் மறுவாழ்வு  சேவை மையம்;

 

என மொத்தம், 223 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலான 577 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்  

 

 

          ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூலதன மான்ய சேமிப்பு நிதி, சிறுபாசன குளம் மேம்பாடு செய்தல், முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், சாலைகள் வலுப்படுத்துதல், குளங்கள் மேம்படுத்துதல், சிறு விளையாட்டு அரங்கங்கள், சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 27 கோடியே 66 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 46 பணிகள்;

         

          எரிசக்தித் துறை சார்பில், கொத்தக்கோட்டை, கடியாப்பட்டி, வார்ப்பட்டு, விசலூர், செங்கமேடு, மதகம், குழிபிறை ஆகிய இடங்களில் 47 கோடியே 85 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  புதிய துணை மின் நிலையங்கள், கீரமங்கலம் மற்றும் வடுகப்பட்டியில் 8 கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்களின் திறன் மின்மாற்றியின் திறன் கூட்டுதல்;

 

          பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒடுகம்பட்டி, கீரனூர், புலியூர், வேலாடிப்பட்டி, கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மாத்தூர் (சிறப்பு),  பெருங்களூர், அரிமளம், கழனிவாசல், கீழபழுவஞ்சி, விராலிமலை, இலுப்பூர், ஆலவயல், சூரியூர், மேலசிவபுரி, ஆவுடையார்கோவில், திருமயம், நகரப்பட்டி, மணமேல்குடி, நல்லூர், அம்மாப்பட்டினம், பொன்னகரம், கொத்தமங்கலம், சிலட்டூர், நெடுவாசல், வல்லத்திராக்கோட்டை, கீரமங்கலம், திருநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 46 கோடியே 88 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்,  கழிப்பறைகள், சுற்றுச்சுவர்கள், குடிநீர் வசதிகள், கூடுதல் கட்டடங்கள், ஆய்வகம்;

 

           பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், கறம்பக்குடியில் 8 கோடியே 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதிக் கட்டடம்;

 

          வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கறம்பக்குடியில் 35 இலட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம்;

 

          இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்,  அறந்தாங்கி, திருமயம், கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆளபிறந்தான், செங்கீரை, வத்தனாகோட்டை ஆகிய கிராமங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள்;

 

          கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், கறம்பக்குடியில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகக் கட்டடம், கோட்டைப்பட்டினம்  மீன்பிடி  இறங்குதளத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய படகு நிறுத்தும் தளம் மற்றும் நிருவாக கட்டடம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படகு நிறுத்தும் தளம் தூர் வாருதல் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்கும் பணிகள்;

 

          மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்,  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடியே 62 இலட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம் அமைக்கும் பணிகள் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   விடுதிக் கட்டடங்களை மேம்படுத்தும் பணிகள்,  கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், சுப்ரமணியபுரம் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்;

         

          நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அறந்தாங்கி நகராட்சி வார சந்தை அருகில் 20 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், புதுக்கோட்டை மாநகராட்சி, ராசாப்பட்டி நடுநிலைப் பள்ளியில் 34 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சிவபுரம் தொடக்கப்பள்ளியில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், திருக்கட்டளை தொடக்கப்பள்ளியில்  72 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கூடிய பள்ளிக் கட்டடம், புதுக்கோட்டை மாநகராட்சியில் கீழ 4ஆம் வீதி மற்றும் வடக்கு 2ஆம் வீதியில் 7 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்டல அலுவலகக் கட்டடம், புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் 3 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள்;

 

          என மொத்தம், 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.


 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

          வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 12,618 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள்,
13 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்,
217 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் திருமண உதவித்தொகை, இயற்கை மரண மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 3,107 பயனாளிகளுக்கு இலவச நத்தம் செட்டில்மெண்ட் வீட்டுமனைப் பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 2,874 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 47 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள் ஆகிய உதவிகள், தாட்கோ சார்பில், 76 பயனாளிகளுக்கு ஆட்டு பண்ணை, ஆட்டோ, கணிணி விற்பனை நிலையம், கறவை மாடுகள், சுமைதூக்கும் வாகனம், டிராக்டர், நிலவுடைமை திட்டம், புகைப்பட கடை, வாகன விற்பனை கடை, வாடகை வாகனம், வீட்டு உபயோக பொருட்கள் கடை, வெல்டிங் கடை, ஜெராக்ஸ் கடை ஆகியவற்றிற்கான கடன் உதவிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 1,101 பயனாளிகளுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள், 4 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 17,107 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக் கடன் இணைப்பு, வட்டார வணிக வள மையம் தொழிற்கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள், 88 பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், 122 பயனாளிகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3,105 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன், பணியாளர் கூட்டுறவு சங்க கடன், பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வீடு அடமானக் கடன், வீட்டுவசதிக் கடன்கள், 500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு ஓய்வூதியம், இயற்கை மரணத்திற்கான உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 718 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நெல் நடவு இயந்திரங்கள் வழங்குதல், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

          பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 190 பயனாளிகளுக்கு அழகு கலை நிலையம், ஆடு வளர்ப்பு, இட்லி கடை, இலவச தையல் இயந்திரம், எண்ணெய் வியாபாரம், கரவை மாடு, கல்வி உதவித் தொகை, காய்கறி வியாபாரம், கீற்று முடைதல், கூடை பின்னல், தையல் தொழில், பால் வியாபாரம் போன்ற பல்வேறு சிறு தொழில்கள் தொடங்குவதற்கு நிதி உதவிகள், 1,077 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்; மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 100 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 300 பயனாளிகளுக்கு திறனுக்கேற்ப வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவிகள், எரிசக்தித் துறை சார்பில், 350 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், விவசாய மின் இணைப்புகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள், கால்நடை பாரமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில், 216 பயனாளிகளுக்கு அலைகள் திட்டத்தின் கீழ் மீனவ மகளிருக்கு நுண் கடன் வழங்குதல், படகு நிறுத்தும் தளம் தூர் வாருதல், வலை பின்னும் கூடம் அமைத்தல், புதிய படகு நிறுத்தும் தளம் அமைத்தல், மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பதற்கு மானியம், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி சான்று, மீன் உணவு பொருட்கள் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் சான்றுகள்; 

          என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 341 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  43,993 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.  

இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை  அமைச்சர்
திரு. எஸ். இரகுபதி, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்
திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. திருச்சி சிவா, திரு. . ராசா, திரு.துரை வைகோ, திரு.கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வீ.முத்துராஜா, திரு.தி.ராமச்சந்திரன், திரு.எம்.சின்னதுரை, திரு. பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணா, ..., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (4.11.2025) வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

        இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறையின் சார்பில் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம், வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் பிணவறை,  காட்பாடி வட்டம் மேல்பாடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு என 5.23  கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 புதிய திட்டப்பணிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஜாப்ராபேட்டை, முத்தரசிகுப்பம் மற்றும் கோரந்தாங்கல்,  பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் டி.டி.மோட்டூர், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் லிங்குன்றம் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறைகள், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கணியம்பாடி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பொதுசுகாதார மையத்திற்கான புதிய கட்டடம், பாலம்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம்,  கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் துத்திதாங்கல் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம்  என 3.15  கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 8  புதிய திட்டப்பணிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே.புரம், கார்ணாம்பட்டு, மேல்வடுகன்குட்டை, மேல்பாடி, உண்ணாமலை சமுத்திரம்  மற்றும் ஜாப்ராபேட்டை, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் வெங்கனபாளையம், சின்ன அணைக்கட்டு, பொய்கை அம்பேத்கர் நகர், ஊனை வாணியம்பாடி மற்றும் அரிமலை, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி மற்றும் பனகரசிகுப்பம், வேலூர் ஊராட்சி ஒன்றியம் பாலமதி, வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம், திருவலம் பேரூராட்சி கம்மராஜபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் என  2.45  கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 16  புதிய திட்டப்பணிகளையும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வேலூர் மாநகராட்சி கொணவட்டத்தில் 75.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய  கட்டடம், கூட்டுறவுத்துறையின் சார்பில் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் அன்னங்குடி மற்றும் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் பாலாத்துவண்ணான் ஆகிய இடங்களில் மொத்தம் 22.29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக்கான 2 புதிய கட்டடங்கள் என மொத்தம் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறையின் சார்பில் காட்பாடி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சுற்றுச்சுவர்,  கோட்டநத்தம் கிராம நூலகத்திற்கு கழிவறை, வேலூர் தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் மற்றும்  மாணவர் விடுதியை புனரமைத்தல், அரசு மருத்துவக் கல்லூரி விடுதி மேம்பாடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு நவீனப்படுத்துதல், சேண்பாக்கம், சின்ன அல்லாபுரம், கொணவட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 வகுப்பறைகள், குடியாத்தம் சமூகநீதி விடுதி சீரமைப்பு, ஏரிகுத்தி கால்நடை மருந்தக புதிய கட்டடம், அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, விருப்பாட்சிபுரம் கிராம நூலக கழிவறை, பேரணாம்பட்டு வட்டம் தரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறைகள் என 14.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  14 புதிய திட்டப்பணிகளுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடியாத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி என மொத்தம் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

 

 

 

அரசு நலத்திட்டங்கள்

 

          இந்நிகழ்ச்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 8,596 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 69 நபர்களுக்கு விபத்து, இயற்கை மரணம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை காசோலைகளையும், 

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 3,500 பயனாளிகளுக்கு 122.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின்கீழ் 499 பயனாளிகளுக்கு 11.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளை மறு சீரமைப்பதற்கான ஆணைகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 70 பயனாளிகளுக்கு பணி அடையாள அட்டைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 27,127 பயனாளிகளுக்கு 40.73 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் இணைப்பு, வாழ்வாதார நிதி, சமுதாய முதலீட்டு நிதி, நுண் நிறுவன நிதி, ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, சுழல் நிதி, இயற்கை பண்ணை தொகுப்பு ஆகிய நலத்திட்டங்களையும்,

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 343 பயனாளிகளுக்கு 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி, கைத்திறன் பேசி உள்ளிட்ட உபகரணங்களையும், சமூக நலத்துறையின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 30 பெண் குழந்தைகளுக்கு மொத்தம் 15 இலட்சம் ரூபாய்க்கான வைப்புத் தொகை பத்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 3,687 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு  31.80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு  71.35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவர் டிரில்லர், சோலார் பம்புசெட்டு, சோலார் டிரையர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 210 பயனாளிகளுக்கு 60.09 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் கறவை மாடு, பழச்செடிகள், காய்கறி விதைகள், மண்புழு உரப்படுக்கை, தேனி பெட்டி, மாடித் தோட்டத் தொகுப்பு, பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பழச்செடி தொகுப்பு, பரப்பு விரிவாக்க திட்ட தென்னை தொகுப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களையும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டைகளையும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு 38.31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை, மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும்,

 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 279 பயனாளிகளுக்கு 4.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், இலவச சலவை பெட்டி, டாம்கோ ஆலீம் குழு கடன்,  தனிநபர் கடன், சீர்மரபினர் நலவாரிய அட்டை, மகளிர் உதவும் சங்க சிறு தொழில் உதவித்தொகையும்,

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு 1.67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும்,  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 174 பயனாளிகளுக்கு 37.43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவு திட்டத்தில் கறவை மாடு, ஆட்டோ வாகனம் வாங்க கடன் உதவி, தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஆணை மற்றும் நலவாரிய அட்டைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் 310 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 300 பயனாளிகளுக்கு 40.58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகை காசோலைகளையும்,

 

குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1,564 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 1,426 பயனாளிகளுக்கு 15.03 கோடி ரூபாய் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 67 பயனாளிகளுக்கு  அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மற்றும் கலைஞர் கைவினை திட்டத்தில் 1.66 கோடி ரூபாய் மானியத்துடன் கடனுதவியும், மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத்துறையின் சார்பில் 411 பயனாளிகளுக்கு 2.05 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி உதவியும்,

 

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திறமை தேடல் தேர்வுகளில் வெற்றி பெற்ற 8 மாணாக்கர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை காசோலைகளையும் என மொத்தம் 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம்.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ.பி.நந்தகுமார், திரு. ப.கார்த்திகேயன், திருமதி அமுலு விஜயன், திரு. ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,                                      திரு. அ.செ.வில்வநாதன்,  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார்,  மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திரு. மு. பாபு, துணை மேயர்                   திரு. மா.சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி  உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற  அரசு விழாவில்
ரூ. 737.88 கோடி
செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை
திறந்து வைத்து, 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
50,752 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.10.2025) இராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 176 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 134 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு 426 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இராமேஸ்வரம், பரமக்குடி, கிளியூர், ஆனந்தூர், கீழதூவல், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, மேலக்கொடுமலூர், நயினார்கோவில், சாயல்குடி ஆகிய இடங்களில் 2 கோடியே 37 இலட்சத்து 6 ஆயிரம்  ரூபாய் செலவில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் கிராம நிருவாக அலுவலர் குடியிருப்பு,

 

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நயினார்கோவில், கோவிலாங்குளம், பரமக்குடி ஆகிய இடங்களில் 10 கோடியே 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சமூக நீதி விடுதிகள்,

 

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 9 கோடியே 92 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் நபார்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், தங்கச்சிமடம், எஸ்.கொடிக்குளம், நம்புதாளை, பெருங்குளம், தொருவளூர், கடலாடி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தொண்டி, ஏர்வாடி ஆகிய இடங்களில் கிளை நூலகங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வேதாளை, செம்படையார்குளம், எல்.கருங்குளம், இருவேலி ஆகிய இடங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள்,

 

தோட்டக்கலைத் துறை சார்பில், உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தென்னை நாற்றங்கால் பண்ணை மேம்படுத்தும் பணி,

 

நீர்வளத் துறை சார்பில், பரமக்குடி வட்டம், பி.கொடிக்குளம் ஊராட்சியில் உபரிநீர் கால்வாய் குறுக்கே பகிரணை அமைத்து 4 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் அகரம் கண்மாய்க்கு புதிய பாசன கால்வாய்,

 

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 39 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம், இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச் சந்தைகள் மற்றும் அறிவுசார் மையங்கள், 96 இலட்சம் ரூபாய் செலவில் மண்டபம் பேரூராட்சியில் எருமை தரவை ஊரணி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிகளில் பூங்காக்கள்,

 

கூட்டுறவுத் துறை சார்பில்,  செல்வநாயகபுரம் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை 61 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு சேவை மையங்கள்,

 

ஆதிராவிடர் நலத் துறை சார்பில், பழஞ்சிறை மற்றும் காட்டுபரமக்குடி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள், ஆழ்துளைக் கிணறு,

 

நெடுஞ்சாலைத் துறை சார்பில், பார்த்திபனூர் – கமுதி சாலை முதல் பெரிய பிச்சைப்பனேந்தல் சாலை, முதலூர் சாலை, திருவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர் –அருப்புக்கோட்டை – திருச்சுழி – நரிக்குடி - பார்த்திபனூர் சாலை, தேவிப்பட்டினம் -நயினார்கோவில் பொட்டவயல் சாலை, முதுகுளத்தூர் - வீரசோழன் சாலை ஆகிய இடங்களில் 36 கோடியே 83 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள், முதுகுளத்தூர் – கமுதி சாலை, பார்த்திபனூர் – கமுதி – அருப்புக்கோட்டை சாலை வரையில் 56 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் புதிய சாலைகள்,

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், கஞ்சியேந்தல், வாழவந்தாள்புரம், வலங்காபுரி, வெங்கடேஷ்வரா காலனி, கூரியூர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள், வண்ணாண்குண்டு மற்றும் நைனாமரைக்கான் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள், வெள்ளாமரிச்சிக்கட்டி, லாந்தை, தலைத்தோப்பு, தெற்குத் தரவை, மருங்கூர், வலசை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பல்வேறு பணிகள் என 12 கோடியே 67 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் 54 முடிவுற்றப் பணிகள்,

 

என மொத்தம், 176 கோடியே 59 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்   

          பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை சார்பில், கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கு சமூக நீதி விடுதிக் கட்டடம்,

         

பள்ளிக் கல்வித் துறை சார்பில்,  இராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லானி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி, போகலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42 கோடியே 86 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைக் கட்டடங்கள்,

         

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 7 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளீடுருவி கதிரியக்க ஆய்வகக் கட்டடம்,

         

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்,  திருவாடானையில் 2 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் வட்ட செயல்முறை கிடங்கு கூடுதல் கட்டடம்,

         

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், வெளிப்பட்டிணத்தில் 11 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட துணை பதிவுத்துறை அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்,

         

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,  மங்களக்குடி  மற்றும் பெருநாழி ஆகிய இடங்களில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்,

         

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3 கோடியே  65 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் புனரமைக்கும் பணிகள்,  கமுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறை மற்றும் பணிமனை அமைக்கும் பணிகள்,

         

கூட்டுறவுத் துறை சார்பில், பாண்டிக்கண்மாய், சாம்பக்குளம், காமன்கோட்டை, அரியனேந்தல் ஆகிய இடங்களில் 1 கோடியே 29 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள்,

         

நீர்வளத் துறை சார்பில், 36 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சருகனி ஆற்றின் குறுக்கே புதிய அணை, போகலூர் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் களரி கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் புனரமைப்பு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைக்கும் பணிகள், பார்த்திபனூர் மதகணை வலது பிரதான கால்வாய் நெடுகையில் தலைமதகு மற்றும் சட்டர்களை மறுசீரமைக்கும் பணிகள்,

         

          வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், பரமக்குடியில் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  மண் பரிசோதனை  நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம்,

         

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,  7 கோடியே 23 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கச்சிமடம், தாமரைக்குளம், கும்பரம், பட்டிணம்காத்தான் தொடக்கப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பூசேரி ஊராட்சியில் நியாயவிலைக் கட்டடம், நெடியமாணிக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம்,

 

என மொத்தம், 134 கோடியே 45 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 150  புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

 


இராமநாதபுரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

        வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 17,095 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  

          ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 150 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள்; 201 பயனாளிகளுக்கு பழங்குடியினர் குடும்ப உறுப்பினர் நல வாரிய அட்டை மற்றும் 1409 பயனாளிகளுக்கு வீட்டுமனை இ-பட்டாக்கள்  என மொத்தம் 1760 பயனாளிகள்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,  10,459 பயனாளிகளுக்கு  கலைஞரின் கனவு இல்லம்,  பழுதடைந்த வீடுகள் சீரமைக்கும் திட்டம்,  முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம், மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் நலன் திட்டம், மீனவர்களுக்கான வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள்,

          தோட்டக்கலைத் துறை சார்பில், 224 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒரு துளி நீரில் அதிக பயிர் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்,  242 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், சீர்மரபினர் உறுப்பினர் அட்டைகள், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

           சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 76 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள்,

கூட்டுறவுத் துறை சார்பில், 3,866 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மீன்வளக் கடன், சுய உதவிக் குழு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், தாட்கோ கடன், ஆதரவற்ற விதவைக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

தாட்கோ சார்பில், 50 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில்,  1,409 பயனாளிகளுக்கு  ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், 25 பயனாளிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டைகள்,

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்,  1,590 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்,

வேளாண் பொறியியல் துறை சார்பில், 180 பயனாளிகளுக்கு துணை வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், தனிப்பட்ட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சூரிய மின்வேலி, சூரிய ஒளி பம்புசெட், சூரிய கூடார உலர்த்தி  அமைக்கும் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

          மகளிர் திட்டம் சார்பில்,   3,740 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் வங்கிக் கடன்,

தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், 4,861 பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம், வீட்டுவசதி  ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,  44 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

          மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1,952 பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்,  முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,  நலவாரிய உதவித் தொகைகள், திறன்பேசி, காதொலிக் கருவிகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில்,  பெற்றோர் இருவர் அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடர் கல்வியை பெற்றிட நிதி ஆதரவுத் திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்புக் கரங்கள் திட்டம் ஆகியவற்றின் கீழ் 531 பயனாளிகளுக்கு உதவிகள்,  

மீன் வளத் துறை சார்பில், 2,648 பயனாளிகளுக்கு கூண்டு மீன் வளர்ப்பு, அலைகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள், 

          என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 426 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  50,752 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன்,   மாண்புமிகு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கே.நவாஸ்கனி,  சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு. செ. முருகேசன், திரு. இராம. கருமாணிக்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள மதி அனுபவ அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் இன்று (13.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் இயங்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமும் போற்றிப் புகழ்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மகளிருக்கான திருவிழா போன்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

இங்கே வந்திருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளுக்கும் முதலில் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே பல்வேறு சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டிய அத்தனை சகோதரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்களை புகழ்ந்து பேசுவதும், வாழ்த்து சொல்றதும் மட்டுமே உண்மையான மகளிர் தின கொண்டாட்டமா நிச்சயமாக அமையாது. உங்களுக்கான அந்த பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வது தான், உண்மையான, மகளிர் தின கொண்டாட்டம். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் தான் இங்கே நடக்ககக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சி.

ஒருமுறை தந்தை பெரியாரிடம் பெண்களுக்கு உரிமை கொடுக்கணும்னு சொல்றீங்களே, அவங்களுக்கு என்னென்ன உரிமை கொடுக்கணும்னு கேட்டாங்க. அதுக்கு பெரியார் அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காம சொன்ன பதில், ஒரு ஆணுக்கு என்னெல்லாம் உரிமை இருக்கின்றதோ அந்த உரிமையெல்லாம் பெண்ணுக்கும் இருக்கணும்னு சொன்னார். அது தான் உண்மையான பெண்ணுரிமைன்னு தந்தை பெரியார் உணர்ந்தார்.

இது தான் நம்முடைய திராவிட இயக்கத்தோட கொள்கை. அதனால தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தொடர்ந்து திட்டங்களாக செயல்படுத்தி வருகின்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி வைத்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் போட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல தமிழ்நாடு காவல்துறையில் முதன்முறையாக பெண் காவலர்களை நியமித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இப்படி அவருடைய சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு கலைஞர் அவர்களோட வழியில நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான திட்டங்களை பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திராவிட மாடல் அரசு, எல்லா வகையிலும் பெண்களுடைய முன்னேற்றத்துக்காக தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றது

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் கையெழுத்தே, பெண்களுக்கான கையெழுத்து. அதுதான் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். அடுத்ததாக அரசுப்பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகள் உயர்கல்வி படிக்க சேர்ந்தால், அவங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தானர்கள்.

இன்றைக்கு மகளிர் காலையில எழுந்ததும் காலை உணவு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று பள்ளிகளில் முதலமைச்சருடைய காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கின்றார்கள்.

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் உங்க மூலமா தான் இந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது என்றால் அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட உத்தரவு தான் காரணம்.

உங்க மூலமா செயல்படுத்தப்படுவதால தான் இன்றைக்கு காலை உணவுத்திட்டம் மிகப்பெரிய வெற்றித் திட்டமா, மற்ற மாநிலங்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு திட்டமாக, இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது

அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கின்ற வகையில கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து கொண்டு இருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இந்த வரிசையில் தான், இன்றைக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 3000 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்க இருக்கிறார்கள். அதுமட்டுமில்ல, முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு குழு உறுப்பினர்களுக்கு I.D. Cards-ஐ தர இருக்கிறார்கள்.

கடந்த 4 வருஷத்துல மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கின்றது. நீங்கள், உங்களுடைய பொருளாதாரத்துக்காக குடும்பத்துல இருக்கிறவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாதுன்னு தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.

இந்த வங்கிக்கடன் இணைப்பை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழு சகோதரிகள் உங்கள் உழைப்பின் மீது, வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாக தான் முதலமைச்சர் அவர்கள் இதை பார்க்கின்றார்கள்

நேற்று முன் தினம் நான் திருவாரூர் மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு பழவனக்குடிங்கிற கிராமத்துல சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை சந்தித்து பேசினேன். அப்போது, அந்த குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அவர்களுடைய குழுக்கள் மூலமாக கிடைச்சிருக்கக்கூடிய பலன்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார்கள். மேலும், குழுக்களை இன்னும் எப்படி சிறப்பா முன்னேற்றலாம்னு ஆலோசனைகளையும் குழு சகோதரிகள் சொன்னார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த குழுவைச் சேர்ந்த சகோதரி கவிதா தன்னுடைய கைப்பட ஒரு லெட்டரை பாராட்டுக் கடிதத்தை நம்முடைய முதலமைச்சருக்கு எழுதி கொடுத்திருந்தாங்க. அதுல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், நம்முடைய முதலமைச்சர் அவர்களையும் பாராட்டி அவரோட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாங்க.

அதுமட்டுமில்ல, அந்தக் கூட்டத்துக்கு வந்த மகளிர் சிலர் குடியிருக்க முறையான வீடு இல்லன்னு கோரிக்கை வச்சாங்க. சிலர் வீட்டுமனைப் பட்டா இல்லன்னு குறைகளை சொன்னாங்க. அதையெல்லாம் எங்கள் துறையை சார்ந்த நாங்கள் அனைவரும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்துக்கு எடுத்துட்டு போனோம்.

உடனே அந்தப் பெண்களுக்கு வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகளையும் உடனே வழங்கச் சொல்லி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவு போட்டாங்க. அதன்படி, கோரிக்கை வச்ச 6 மணி நேரத்துலயே, அந்த மகளிரோட கோரிக்கைகளை நாங்க நிறைவேற்றி கொடுத்தோம்.

குறிப்பாக, கோரிக்கைகளை முன் வைத்த ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கலைஞர் கனவு இல்லம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை நானே அவர்களது கைகளில் கொடுத்துட்டு வந்தேன்.

அந்த ஆணைகளை வாங்குனதும், அவர்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஏழை – எளிய மகளிரோட இந்த மகிழ்ச்சிக்குப் பேரு தான் திராவிட மாடல் அரசு.

எனவே, நம்முடைய மகளிர் நீங்கள் கேட்கின்ற அத்தனை திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். இனியும் நீங்கள் கேட்க போகின்ற திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்களும், திராவிட மாடல் அரசும், நம்முடைய துறையும், என்றென்றெக்கும் உங்களுக்கு ஆதரவா இருப்போம். அதே மாதிரி இந்த அரசுக்கும், நம்முடைய முதலமைச்சருக்கும் நீங்கள் எப்போதும் ஆதரவா இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வங்கிக்கடன் இணைப்புகளைப் பெற்ற அத்தனை மகளிருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

மேலும்

Page 1 of 6, showing 9 record(s) out of 54 total