தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள மதி அனுபவ அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
