மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் இன்று (13.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் இயங்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
