மண்ணால் செய்யப்படும் பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தென்னமாதேவி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் முன்னேற்ற சங்க கய உதவிக் குழு (MMS-6) ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் களிமணணில் பல்வேறு பொம்மைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்றல் மகளிர சுய உதவிக் குழுவானது மகளிர் திட்ட சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக கடன் ரூ.2 இலட்சம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிதி ரூ.150 இலட்சம் பெற்று தங்களின் தொழிலை விரிவுபடுத்தி வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்னமாதேவி மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS- 6) வங்கிக் கடன் ரூ.2 இலட்சம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி உதவி பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சுடுமண் மூலமாக பொம்மைகள் செய்து விற்பனை செய்து வந்த இக்குழுக்கள் ர அய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) மூலமாக பயிற்சி பெற்று கலைநயமிக்க பல்வேறு வண்ணங்களில் மண்பாண்ட பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்வதோடு, ஆஸ்த்ரேலியா, களடா மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.

இக்குழுக்கள் தயார் செய்யும் பொம்மைகள் மற்றும் கைவிளைப் பொருட்களுக்கு மகளிர் திட்டத்தின் வாயிலாக உள்ளூரிலும், மாநில அளவில் விற்பனை கண்காட்சியிலும் மற்றும் பிற மாநிலங்களில் நடத்தப்படும் சாராஸ் உள்ளிட்ட கண்காட்சியிலும், விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்குழுக்களின் உறுப்பினர்கள் மாதந்தோறும் கணிசமான வருவாய் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதார வார்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தென்றல் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS-6) ஆகிய சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.