மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல்

மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 06.02.2023 அன்று மதுரை மாவட்டம், பாண்டி கோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 72.092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.