மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (14.12.2021) திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பொருட்களின் கண்காட்சியினைப் பார்வையிட்டார். உடன் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.