மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "ஊரக தொழில் முனைவுகளுக்குப் புதிய பாதை" மற்றும் "வறுமையிலிருந்து வளத்தை நோக்கி” புத்தகங்களை வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "ஊரக தொழில் முனைவுகளுக்குப் புதிய பாதை" மற்றும் "வறுமையிலிருந்து வளத்தை நோக்கி” புத்தகங்களை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளர் திரு. சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.